search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி பலி
    X

    கோவை அருகே தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோவை அருகே தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கோவை:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள மாலேகவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் பொன்னையா(வயது 63). கூலி தொழிலாளி.

    இவர் கடந்த 30-ந் தேதி அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள மரத்தில் இருந்த கூட்டில் இருந்து கலைந்து வந்த தேனீக்கள் பொன்னையாவை கொட்டின.

    இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கிணத்துக் கடவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×