என் மலர்
செய்திகள்

கைதான மீனவர் ராமையன்
புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேர் படகுடன் சிறைப்பிடிப்பு: இலங்கை கடற்படையினர் நடவடிக்கை
எல்லை தாண்டி வந்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 5 பேர் இன்று படகுடன் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து 162 விசைப்படகுகளிலும், கோட்டைப்பட்டினத்தில் இருந்து 224 விசைப்படகுகளிலும் மீன்துறை அலுவலக அனுமதியுடன் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் பல்வேறு பகுதிகளில் மீன் பிடித்தனர். இதில் ராமையன் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற ராமையன் (வயது 47), செல்லத்துரை (60), சேகர் (35), விவேகானந்தன் (25), சுப்பையா (40) ஆகிய 5 பேரும் நள்ளிரவில் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் மின்னல் வேகத்தில் வந்தது. அவர்களை பார்த்ததும் புதுக்கோட்டை மீனவர்கள் உடனடியாக வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்த புறப்பட தயாரானார்கள்.
ஆனால் அதற்குள் அவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் இது இலங்கைக்கு சொந்தமான கடல் பகுதி. பல முறை எச்சரித்தும் இங்கு வந்து ஏன் மீன்பிடிக்கிறீர்கள்? என்று கூறியுள்ளனர்.
பின்னர் அவர்களின் விசைப்படகில் தாவிக்குதித்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களை பறித்தனர். தொடர்ந்து மீனவர்கள் 5 பேரையும் கைது செய்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறை முகாம் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மீனவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
இன்று காலை அவர்கள் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அதன் பின்னரே அவர்கள் விடுதலை செய்யப்படுவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்ற விபரம் தெரியவரும்.
மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் மற்ற மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து 162 விசைப்படகுகளிலும், கோட்டைப்பட்டினத்தில் இருந்து 224 விசைப்படகுகளிலும் மீன்துறை அலுவலக அனுமதியுடன் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் பல்வேறு பகுதிகளில் மீன் பிடித்தனர். இதில் ராமையன் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற ராமையன் (வயது 47), செல்லத்துரை (60), சேகர் (35), விவேகானந்தன் (25), சுப்பையா (40) ஆகிய 5 பேரும் நள்ளிரவில் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் மின்னல் வேகத்தில் வந்தது. அவர்களை பார்த்ததும் புதுக்கோட்டை மீனவர்கள் உடனடியாக வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்த புறப்பட தயாரானார்கள்.
ஆனால் அதற்குள் அவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் இது இலங்கைக்கு சொந்தமான கடல் பகுதி. பல முறை எச்சரித்தும் இங்கு வந்து ஏன் மீன்பிடிக்கிறீர்கள்? என்று கூறியுள்ளனர்.
பின்னர் அவர்களின் விசைப்படகில் தாவிக்குதித்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களை பறித்தனர். தொடர்ந்து மீனவர்கள் 5 பேரையும் கைது செய்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறை முகாம் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மீனவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
இன்று காலை அவர்கள் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அதன் பின்னரே அவர்கள் விடுதலை செய்யப்படுவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்ற விபரம் தெரியவரும்.
மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் மற்ற மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






