search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புகாரை வாங்க மறுத்த சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
    X

    புகாரை வாங்க மறுத்த சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

    நாகை மாவட்டம் பொறையாறு அருகே புகாரை வாங்க மறுத்த சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்ற போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள திருக்களாஞ்சேரியை சேர்ந்தவர் ஜான்சன். இவர் தனது மகளை காணவில்லை என பொறையாறு போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவேந்திரனிடம் புகார் அளித்துள்ளார்.

    ஆனால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதனை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜான்சன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரையிடம் புகார் அளித்தார்.

    இதனை தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவேந்திரனை ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இந்த நிலையில் மாயமான ஜான்சன் மகள் தனது மாமா வீட்டிலிருந்து மீட்கப்பட்டார்.

    Next Story
    ×