என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை அருகே அரசு பஸ் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்தது
புதுக்கோட்டை அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. டிரைவர் படுகாயம் அடைந்தார்.
திருவரங்குளம்:
புதுக்கோட்டை மாவட்டம், மேட்டுபட்டி அருகே உள்ள நந்தன வயலைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 30). ஆட்டோ ஓட்டுனர்.
இவர் சம்பவத்தன்று மேட்டுபட்டியிலிருந்து புதுக்கோட்டைக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது மேட்டுப்பட்டியை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்து நிலை தடுமாறி ஆட்டோ மீது மோதியது.
இதில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது. ஆட்டோ பின்னால் வந்து கொண்டிருந்த மினி லாரி ஆட்டோ மீது மோதாமல் இருக்க திரும்பியதில் லாரி கரையோரத்தில் உள்ள கால்வாயில் இறங்கியது. ஆட்டோவை ஓட்டி வந்த பன்னீர் செல்வத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம், மேட்டுபட்டி அருகே உள்ள நந்தன வயலைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 30). ஆட்டோ ஓட்டுனர்.
இவர் சம்பவத்தன்று மேட்டுபட்டியிலிருந்து புதுக்கோட்டைக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது மேட்டுப்பட்டியை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்து நிலை தடுமாறி ஆட்டோ மீது மோதியது.
இதில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது. ஆட்டோ பின்னால் வந்து கொண்டிருந்த மினி லாரி ஆட்டோ மீது மோதாமல் இருக்க திரும்பியதில் லாரி கரையோரத்தில் உள்ள கால்வாயில் இறங்கியது. ஆட்டோவை ஓட்டி வந்த பன்னீர் செல்வத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






