search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி படுகாயம்
    X

    வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி படுகாயம்

    வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி படுகாயம் அடைந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த பன்னாள் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாத்துரை (45). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தற்சமயம் வேதாரண்யம் சிட்டி யூனியின் வங்கியில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அவர் மாலை வங்கி பணியை முடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தனது ஊருக்கு வேதாரண்யம் வாய்மேடு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ராமநாதபுரம் மாவட்டம், ரோகிமாநகர், கன்னிராசபுரத்தைச் சேர்ந்த தாமஸ் மகன் அந்தோணி (22) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிர்பாராதவிதமாக அய்யாத்துரை மோட்டார் சைக்கிளில் மீது மோதினார். இதில் அய்யாதுரை பலத்த காயமடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அன்புராஜன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    Next Story
    ×