search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகை அருகே மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர் கைது
    X

    நாகை அருகே மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர் கைது

    நாகை அருகே 500 மது பாட்டில்கள் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் செம்பனார் கோவில் அருகே மோமாத்தூர் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் போலீசாரை கண்டவுடன் நிற்காமல் சென்றுள்ளது. இதையடுத்து அந்த காரை விரட்டி பிடித்து சோதனை செய்தனர்.

    அதில் 500 மதுபாட்டில்கள் கடத்திவரப்பட்டிருப்பது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டிவந்த தேனி மாவட்டம் கம்பம் மேட்டுத்தெருவை சேர்ந்த ஆயத்துல்லா என்பரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×