என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவசியம் ஏற்பட்டால் அரசியலுக்கு வருவேன்: நடிகர் லாரன்ஸ் பேட்டி
    X

    அவசியம் ஏற்பட்டால் அரசியலுக்கு வருவேன்: நடிகர் லாரன்ஸ் பேட்டி

    தமிழகத்தில் அவசியம் ஏற்பட்டால் மாணவர்களுடன் இணைந்து நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்று நடிகர் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் - இளைஞர்கள் ஒருவாரத்திற்கு மேலாக மெரினாவில்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ச்சியாக கலந்து கொண்டு முக்கிய பங்கு வகித்தார்.

    இறுதி நாளில் வன்முறை நடைபெறுவதற்கு முன்பாக மெரினாவில் மாணவர்களுடன் சமாதான முயற்சியிலும் ஈடுபட்டார். அதோடு, வன்முறைக்கு பிறகு சில மாணவர்களுடன் முதல்வரை சந்தித்த லாரன்ஸ், சிறையில் உள்ள அப்பாவி மாணவர்கள்-இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார். 

    இந்நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பிரிவு மாணவர்களுடன் நடிகர் ராகவா லாரன்ஸ் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

    அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த சில தினங்களாக நான் அரசியலுக்கு வருவது போன்ற செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அது குறித்து தெளிவு படுத்தவே இந்த சந்திப்பு. 

    தற்போது அரசியலுக்கு வர வேண்டும் என எண்ணம் எனக்கு ஏதுமில்லை. மாணவர்களுடன் கலந்து ஆலோசித்து கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்து சில உதவிகளை மட்டும் செய்வது என்று முடிவு செய்துள்ளேன். 

    அதற்காக மாணவர்களுடன் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்க உள்ளோம். அமைப்பின் பெயர் உட்பட அனைத்து மாணவர்களின் முடிவு தான். இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த அமைப்பில் எந்த கட்சியை சார்ந்தவர்களும் இருக்க மாட்டார்கள். 

    தற்போதைக்கு அரசியலுக்கு வர வேண்டும் எண்ணம் இல்லை என்றாலும் அவசியம் ஏற்பட்டால் மாணவர்களுடன் இணைந்து அரசியலுக்கு வருவேன். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×