என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கம்பம் அருகே 2 வீடுகளில் புகுந்து பணம் கொள்ளை: 4 பேர் கைது
தேனி:
கம்பம் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனிக்கொடி (வயது43). கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மற்றொரு அறையில் பீரோ திறக்கும் சத்தம் கேட்டது. அவர் எழுந்து பார்த்தபோது 2 வாலிபர்கள் பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்றனர்.
அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவர்களை பிடித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் அவர்கள் கம்பம் பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அபினேஷ் (24), சிவமாயன் (33) என தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கம்பம் சொசைட்டி தெருவை சேர்ந்தவர் அர்ஜூணன். இவரது மனைவி ரஞ்சிதம் (45). சம்பவத்தன்று இவர் தான் வீட்டு சமையல் அறையில் ரூ.1000 பணம் வைத்திருந்தார். அந்த பணம் திருடு போனது. இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (15), அசோக் (11) ஆகிய இருவரும்தான் அந்த பணத்தை திருடியது தெரியவந்தது. போலீசார் அந்த சிறுவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்