என் மலர்
செய்திகள்

சங்கரன்கோவிலில் கோவில் பூசாரி தற்கொலை: தூத்துக்குடியை சேர்ந்தவர்
சங்கரன்கோவில்:
தூத்துக்குடி ஜி.பி. நகரை சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 43). இவர் அங்குள்ள கோவிலில் பூசாரியாக வேலை செய்து வந்தார். இவரின் மனைவி தங்கபிரமு (32). கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று தங்கபிரமு கணவரிடம் கோபித்துக் கொண்டு சங்கரன்கோவில் வடக்கு ரதவீதியில் உள்ள தனது தங்கை சங்கரியின் வீட்டிற்கு வந்து விட்டாராம். அவரை கூப்பிட சுடலைமுத்து சங்கரன்கோவிலுக்கு வந்துள்ளார். அங்கு கணவன்- மனைவி இடையே சமாதானம் ஏற்படவில்லை என்பதால் இரண்டு நாட்கள் கழித்து அனுப்பி வைக்கிறோம் என கூறியுள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்த சுடலைமுத்து கையில் வைத்திருந்த பூச்சிமருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சங்கரன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.