என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே வாலிபர் தற்கொலை
வேதாரண்யம் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த வாலிபர் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொண்டார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடு கிராமத்தைச் சேர்ந்த பக்கிரிசாமி மகன் ஞானமணி (வயது 30). இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். தஞ்சாவூரில் உள்ள மருத்துவரிடம் சிகிச்சை பெற்று மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார்.
இந்நிலையில் அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து விஷம் குடித்துவிட்டார். அவரை உறவினர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது மனைவி மதுபாலா கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் சப்-இன்ஸ் பெக்டர் ரெங்கநாதன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story