என் மலர்
செய்திகள்

செங்கல்பட்டில் கட்டி முடித்து 2 ஆண்டு ஆகியும் திறக்கப்படாத அரசு ஊழியர் குடியிருப்பு
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு பழைய பஸ்நிலையம் அருகே அரசு சிறுவர் சீர்திருத்தப்பள்ளி 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.
இங்கு கொலை, கொள்ளை, திருட்டு உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 18 வயதுக்குட்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கல்வி, தொழிற் கல்வி, விளையாட்டு போன்றவைகள் ஆசிரியர்களை கொண்டு கற்று தரப்பட்டு வருகின்றன.
கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், ஆசிரியர்கள், தொழில் கல்வி ஆசிரியர்கள், காவலர்கள் உள்பட 40 பேர் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஊழியர்களுக்காக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே ஓடுகளால் ஆன 20 வீடுகள் உருவாக்கப்பட்டது. தற்போது அந்த வீடுகள் சேதம் அடைந்து காணப்படுகிறது.
இதற்கிடையே பாழடைந்த குடியிருப்பு அருகே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் மற்றும் ஊழியர்களுக்காக 18 குடியிருப்புகள் கட்ட கட்டுமான பணி தொடங்கப்பட்டது. இந்த பணி கடந்த 2015-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. ஆனால் குடியிருப்பு இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
இது குறித்து ஊழியர்கள் கூறும்போது, பாழடைந்த அரசு குடியிருப்பில் குழந்தைகளுடன் இருந்து வருகிறோம். விஷ பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் சுற்றி இருப்பதால் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வசித்து வருகிறார்கள்.
கட்டி முடிக்கப்பட்டு அரசு சிறப்பு இல்லம் திறக்கப்படாமல் உள்ளது. ஊழியர்களுக்காக கட்டி முடிக்கப்பட்ட 18 குடியிருப்புகள் திறக்கப்பட வேண்டும்’ என்றனர்.






