என் மலர்
செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே மருந்து கடையில் ரூ.50 ஆயிரம் கொள்ளை
ஸ்ரீபெரும்புதூர் அருகே மருந்து கடையில் ரூ.50 ஆயிரம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பேரப்பணஞ்சேரியில் மருந்து கடை நடத்தி வருபவர் மகேஷ். நேற்று இரவு கடையை பூட்டி சென்றார். இன்று காலை கடைபூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த மகேஷ் உள்ளே சென்று பார்த்தபோது ரூ.50 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. மேலும் பொருட்களையும் அள்ளிச் சென்றுள்ளனர்.
மருந்து கடை அருகே இருந்த 2 மளிகை கடையின் பூட்டை கொள்ளையர்கள் உடைத்துள்ளனர். ஆனால் அங்கு பணம் இல்லாததால் கொள்ளையடித்து செல்லவில்லை. இதுகுறித்து மணிமங்களம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story