என் மலர்
செய்திகள்

சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம்
சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை:
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இந்த பணியில் 200 பெண்கள் உள்பட 250 பேர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நேற்று காலையில் திடீரென பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியரசு தினத்தையொட்டி மருத்துவமனையில் வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ் தகுதியுடையவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும், அத்துடன் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். வார விடுமுறை வழங்க வேண்டும். பி.எப் தொகை பிடித்தம் செய்து செலுத்துவதற்கான உரிய கணக்குகளும் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்த அவர்கள் மருத்துவமனைக்கு வெளியே அமர்ந்து வேலைக்கு செல்ல மறுத்துவிட்டனர். நேற்று காலை 7.30 மணியில் இருந்து மதியம் 3வரை துப்புரவு பணியாளர்கள் பணிக்கு செல்லமால் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் துப்புரவு பணியாளர்களுடன் மருத்துவனை பாதுகாவலர்களும் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து மருத்துவனையில் வழக்கமாக நடைபெறும் துப்புரவு பணி மற்றும் பாதுகாப்பு பணி செய்ய ஆள் இல்லாமல் மருத்துவமனை ஊழியர்கள் பெரிதும் அவதியடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த இந்த தனியார் நிறுவனத்தின் மதுரை மண்டல மேலாளர் தாஸ் மற்றும் சிவகங்கை மருத்துவமனை மேலாளர் மாரியப்பன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து மருத்துவனை டீன் பொறுப்பு மகேஸ்வரி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் குழந்தைஆனந்தன் ஆகியோர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் மற்றும் அந்த தனியார் நிறுவன அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரச முடிவு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இந்த பணியில் 200 பெண்கள் உள்பட 250 பேர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நேற்று காலையில் திடீரென பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியரசு தினத்தையொட்டி மருத்துவமனையில் வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ் தகுதியுடையவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும், அத்துடன் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். வார விடுமுறை வழங்க வேண்டும். பி.எப் தொகை பிடித்தம் செய்து செலுத்துவதற்கான உரிய கணக்குகளும் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்த அவர்கள் மருத்துவமனைக்கு வெளியே அமர்ந்து வேலைக்கு செல்ல மறுத்துவிட்டனர். நேற்று காலை 7.30 மணியில் இருந்து மதியம் 3வரை துப்புரவு பணியாளர்கள் பணிக்கு செல்லமால் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் துப்புரவு பணியாளர்களுடன் மருத்துவனை பாதுகாவலர்களும் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து மருத்துவனையில் வழக்கமாக நடைபெறும் துப்புரவு பணி மற்றும் பாதுகாப்பு பணி செய்ய ஆள் இல்லாமல் மருத்துவமனை ஊழியர்கள் பெரிதும் அவதியடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த இந்த தனியார் நிறுவனத்தின் மதுரை மண்டல மேலாளர் தாஸ் மற்றும் சிவகங்கை மருத்துவமனை மேலாளர் மாரியப்பன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து மருத்துவனை டீன் பொறுப்பு மகேஸ்வரி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் குழந்தைஆனந்தன் ஆகியோர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் மற்றும் அந்த தனியார் நிறுவன அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரச முடிவு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story






