என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவட்டார், குலசேகரத்தில் பள்ளி மாணவன்-பெண் மாயம்
Byமாலை மலர்28 Jan 2017 3:58 PM GMT (Updated: 28 Jan 2017 3:58 PM GMT)
திருவட்டார் , குலசேகரத்தில் பள்ளி மாணவன் மற்றும் பெண் மாயமானது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
திருவட்டார் நெடும்பாறை காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). இவரது மகன் ரதீஷ் (16). இவர் காட்டாத்துறையில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் பள்ளி முடிந்து நீண்டநேரம் ஆகியும் ரதீஷ் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மாணவனை தேடி பள்ளிக்கு சென்றனர். ரதீஷ் அங்கு இல்லை.
இதையடுத்து உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். எங்கும் அவர் இல்லாததால் இதுகுறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பட்டாணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான பள்ளி மாணவன் ரதீசை தேடி வருகின்றனர்.
குலசேகரம் மடத்தூர் கோணம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 47). இவரது மனைவி மேரிஸ்டெல்லா (45). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளது. ரவிச்சந்திரன் வெளிநாட்டில் வேலைப் பார்த்துவந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார்.
அப்போது குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று மேரிஸ்டெல்லா வீட்டில் இருந்து உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து ரவிச்சந்திரன், ஸ்டெல்லாவை தேடி உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கு அவர் இல்லை. இதையடுத்து தோழிகளின் வீடுகளில் தேடினார். அங்கும் அவர் இல்லை.
இதுகுறித்து குலசேகரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப்-இன்ஸ்பெக்டர் வின்சென்ட் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண் மேரிஸ்டெல்லாவை தேடி வருகின்றனர்.
திருவட்டார் நெடும்பாறை காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). இவரது மகன் ரதீஷ் (16). இவர் காட்டாத்துறையில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் பள்ளி முடிந்து நீண்டநேரம் ஆகியும் ரதீஷ் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மாணவனை தேடி பள்ளிக்கு சென்றனர். ரதீஷ் அங்கு இல்லை.
இதையடுத்து உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். எங்கும் அவர் இல்லாததால் இதுகுறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பட்டாணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான பள்ளி மாணவன் ரதீசை தேடி வருகின்றனர்.
குலசேகரம் மடத்தூர் கோணம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 47). இவரது மனைவி மேரிஸ்டெல்லா (45). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளது. ரவிச்சந்திரன் வெளிநாட்டில் வேலைப் பார்த்துவந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார்.
அப்போது குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று மேரிஸ்டெல்லா வீட்டில் இருந்து உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து ரவிச்சந்திரன், ஸ்டெல்லாவை தேடி உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கு அவர் இல்லை. இதையடுத்து தோழிகளின் வீடுகளில் தேடினார். அங்கும் அவர் இல்லை.
இதுகுறித்து குலசேகரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப்-இன்ஸ்பெக்டர் வின்சென்ட் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண் மேரிஸ்டெல்லாவை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X