என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேடசந்தூர் அருகே 4 வழிச்சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த கண்டெய்னர் லாரி
Byமாலை மலர்28 Jan 2017 11:45 AM GMT (Updated: 28 Jan 2017 11:45 AM GMT)
வேடசந்தூர் அருகே இன்று 4 வழிச்சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த கண்டெய்னர் லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேடசந்தூர்:
கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி கண்டெய்னர் லாரி இன்று வந்து கொண்டிருந்தது. வேடசந்தூர் அய்யர்மடம் பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியன் தடுப்பு கம்பிகளை மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் பின்னால் வந்த அனைத்து வாகனங்களும் உடனே நிறுத்தப்பட்டன. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.
மற்ற வாகன ஓட்டுனர்கள் லாரி டிரைவரை சத்தம்போடவே அவர் அங்கிருந்து ஓடிவிட்டார். இது குறித்து நெடுஞ்சாலைத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் வந்து சாலையின் நடுவே கிடந்த லாரியை அப்புறப்படுத்தினர். இதனால் திண்டுக்கல்-கரூர் மெயின்ரோட்டில் சுமார் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X