என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பனிச்சரிவில் சிக்கி தஞ்சை ராணுவ வீரர் பலி - சோகத்தில் மூழ்கிய கிராமம்
Byமாலை மலர்27 Jan 2017 12:22 PM GMT (Updated: 27 Jan 2017 12:22 PM GMT)
காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி ஒரத்தநாட்டை சேர்ந்த ராணுவ வீரர் இறந்தார். இதனால் அவரது சொந்த ஊர் கிராம மக்களை சோகத்தை ஆழ்த்தி உள்ளது.
தஞ்சாவூர்:
காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி ஒரத்தநாட்டை சேர்ந்த ராணுவ வீரர் இறந்தார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கீழையூரை சேர்ந்தவர் பூமிநாதன். கூலித் தொழிலாளி. இவரது மகன் இளவரசன் (27).
இவர் கடந்த 4ஆண்டுகளுக்கு முன் ராணுவத்தில் சேர்ந்தார். காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பகுதியில் பணியில் ஈடுபட்டு இருந்தார். குரோஷ் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் 14 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
அதில் இளவரசனும் ஒருவர் ஆவார். அவர் இறந்த தகவல் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கதறி துடித்தனர். மேலும் கண்ணந்தங்குடி கீழையூர் கிராமமும் சோகத்தில் மூழ்கியது.
பனிச்சரிவில் இறந்த ராணுவ வீரர் இளவரசன் உடல் வருகிற திங்கட்கிழமை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது. அங்கு இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.
காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி ஒரத்தநாட்டை சேர்ந்த ராணுவ வீரர் இறந்தார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கீழையூரை சேர்ந்தவர் பூமிநாதன். கூலித் தொழிலாளி. இவரது மகன் இளவரசன் (27).
இவர் கடந்த 4ஆண்டுகளுக்கு முன் ராணுவத்தில் சேர்ந்தார். காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பகுதியில் பணியில் ஈடுபட்டு இருந்தார். குரோஷ் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் 14 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
அதில் இளவரசனும் ஒருவர் ஆவார். அவர் இறந்த தகவல் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கதறி துடித்தனர். மேலும் கண்ணந்தங்குடி கீழையூர் கிராமமும் சோகத்தில் மூழ்கியது.
பனிச்சரிவில் இறந்த ராணுவ வீரர் இளவரசன் உடல் வருகிற திங்கட்கிழமை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது. அங்கு இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X