என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சேலம் சிவதாபுரம் பகுதியில் மாணவர் விபத்தில் பலி
சேலம்:
சேலம் அரிசிபாளையம் ஆர்டி.பால் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் சூர்யா (வயது 20). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
சிவதாபுரம் மாணிக்க கவுண்டர் தெரு பகுதியில் வந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறியதால் சூர்யா கீழே விழுந்தார்.
அப்போது எதிரே வந்த தண்ணீர் லாரி இவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் தலையின் பின்பகுதியில் பலத்த அடிபட்ட சூரியா சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்தததும் சேலம் மாநகர போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.பின்னர் பலியான மாணவரின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ஆஸ்பத்திரிக்கு சென்ற மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுது புரண்டனர்.
பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்