என் மலர்
செய்திகள்

குடும்ப தகராறில் மனைவி புகார்: புதுமாப்பிள்ளை தற்கொலை
போலீஸ் அழைத்து சென்றதால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டை அடுத்த மலையாள நத்தத்தை சேர்ந்தவர் அருண் பாண்டியன் (வயது 27). இவருக்கும் மதுராந்தகத்தை அடுத்த அய்யனார் கோவில் பகுதியை சேர்ந்த ஜெய மாலினிக்கு கடந்த 5 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.
தனிக் குடித்தனம் செல்வது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுபற்றி அறிந்த ஜெயமாலினியின் தாய் முத்துலட்சுமி மற்றும் உறவினர்கள் அருண் பாண்டியன் வீட்டிற்கு வந்தனர்.
அப்போது அருண்பாண்டியன் வீட்டில் இல்லை. அவரது பெற்றோரிடம் ஜெயமாலினியின் உறவினர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அருண் பாண்டியனின் தாயார் அஞ்சலை செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்தார்.
இதற்கிடையே ஜெயமாலினியும் போலீசில் புகார் செய்தார். அதில், நகையை அபகரித்து கணவர் மற்றும் மாமனார், மாமியார் துன்புறுத்துவதாக தெரிவித்து இருந்தார்.
இதுபற்றி விசாரிப்பதற்காக அருண்பாண்டியனை போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது அவரை கடுமையான வார்த்தைகளால் கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் மனவேதனை அடைந்த அருண்பாண்டியன் மலையாளநத்தம் ஏரிக்கரையில் மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருண்பாண்டியன் பரிதாபமாக இறந்தார்.
இதனை அறிந்த அவரது உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அருண்பாண்டியன் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்- இன்ஸ்பெக்டர் தாமோதரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டை அடுத்த மலையாள நத்தத்தை சேர்ந்தவர் அருண் பாண்டியன் (வயது 27). இவருக்கும் மதுராந்தகத்தை அடுத்த அய்யனார் கோவில் பகுதியை சேர்ந்த ஜெய மாலினிக்கு கடந்த 5 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.
தனிக் குடித்தனம் செல்வது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுபற்றி அறிந்த ஜெயமாலினியின் தாய் முத்துலட்சுமி மற்றும் உறவினர்கள் அருண் பாண்டியன் வீட்டிற்கு வந்தனர்.
அப்போது அருண்பாண்டியன் வீட்டில் இல்லை. அவரது பெற்றோரிடம் ஜெயமாலினியின் உறவினர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அருண் பாண்டியனின் தாயார் அஞ்சலை செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்தார்.
இதற்கிடையே ஜெயமாலினியும் போலீசில் புகார் செய்தார். அதில், நகையை அபகரித்து கணவர் மற்றும் மாமனார், மாமியார் துன்புறுத்துவதாக தெரிவித்து இருந்தார்.
இதுபற்றி விசாரிப்பதற்காக அருண்பாண்டியனை போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது அவரை கடுமையான வார்த்தைகளால் கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் மனவேதனை அடைந்த அருண்பாண்டியன் மலையாளநத்தம் ஏரிக்கரையில் மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருண்பாண்டியன் பரிதாபமாக இறந்தார்.
இதனை அறிந்த அவரது உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அருண்பாண்டியன் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்- இன்ஸ்பெக்டர் தாமோதரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






