என் மலர்
செய்திகள்

கோடியக்கரையில் கடல் சீற்றத்தால் 2000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
கோடியக்கரையில் இன்று காலை கடல் சீற்றத்தால் 2000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் 350 விசைப்படகுகள் உள்பட பெரிய படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் என்பதால் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடல் பகுதியில் கடந்த 2 நாட்களாக கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் போதிய மீன்கள் கிடைக்காததாலும், கடல் சீற்றம் காரணமாகவும் கரைக்கு திரும்பி வருகின்றனர்.
இன்று காலை முதல் கோடியக்கரையில் கடற்பகுதியில் கடல் சீற்றத்துடன் இருந்தது. இதனால் வழக்கம்போல் காலை 11 மணிக்கு கடலுக்கு செல்ல தயாரான மீனவர்கள் அச்சத்துடன் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு வீட்டுக்கு திரும்பினர்.
இதனால் சுமார் 350 விசைப்படகுகள் உள்பட பெரிய படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் 2000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
Next Story






