என் மலர்
செய்திகள்

நாகை அருகே பாம்பு கடித்து பெண் பலி
நாகை அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை அருகே உள்ள கீழையூர் வைரவன் காட்டை சேர்ந்தவர் வேதையன் மனைவி ஆனந்தவல்லி (வயது 46). இவர் காமேஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு வயலில் வேலை பார்த்த போது அவரை ஒரு பாம்பு கடித்தது. அவரை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக கீழையூர் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






