என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டையில் அங்கன்வாடி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் வேலை நிறுத்தம் செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் வேலை நிறுத்தம் செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநிலம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்திலிருந்து ஊர்வலமாக வந்த அங்கன்வாடி ஊழியர்கள் அண்ணாசிலை அருகில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இந்திராணி தலைமை வகித்தார். கோரிக்கைளை விளக்கி மாவட்டச் செயலாளர் பச்சையம்மாள் பேசினார்.
போராட்டத்தை ஆதரித்து சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் முகமதலிஜின்னா, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் நாகராஜன், செயலாளர் ரெங்கசாமி, துணைத் தலைவர் கோவிந்தசாமி, வருவாயத்துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் நாகராஜன், சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சத்தி உள்ளிட்டோர் பேசினர்.
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு முன்பாக 20 சதவிகிதம் ஊதியத்தை இடைக் கால நிவாரணமாக வழங்க வேண்டும். பணிநிறைவின் போது வாங்கும் சம்பளத்தில் 50 சதவிகிதத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். பணிக் கொடையை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மினி மைய பணியாளர் மற்றும் தகுதியான உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். பதவி உயர்வில் செல்லும் மேற்பார்வையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண் டும். அங்கன்வாடிப் பணியாளர்களை பிற பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது. செலவினத் தொகைகளை மாதம்தோறும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் வேலை நிறுத்தம் செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநிலம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்திலிருந்து ஊர்வலமாக வந்த அங்கன்வாடி ஊழியர்கள் அண்ணாசிலை அருகில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இந்திராணி தலைமை வகித்தார். கோரிக்கைளை விளக்கி மாவட்டச் செயலாளர் பச்சையம்மாள் பேசினார்.
போராட்டத்தை ஆதரித்து சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் முகமதலிஜின்னா, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் நாகராஜன், செயலாளர் ரெங்கசாமி, துணைத் தலைவர் கோவிந்தசாமி, வருவாயத்துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் நாகராஜன், சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சத்தி உள்ளிட்டோர் பேசினர்.
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு முன்பாக 20 சதவிகிதம் ஊதியத்தை இடைக் கால நிவாரணமாக வழங்க வேண்டும். பணிநிறைவின் போது வாங்கும் சம்பளத்தில் 50 சதவிகிதத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். பணிக் கொடையை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மினி மைய பணியாளர் மற்றும் தகுதியான உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். பதவி உயர்வில் செல்லும் மேற்பார்வையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண் டும். அங்கன்வாடிப் பணியாளர்களை பிற பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது. செலவினத் தொகைகளை மாதம்தோறும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
Next Story






