என் மலர்
செய்திகள்

அரியலூர் அருகே இளம்பெண்ணை கடத்திய வாலிபர் கைது
அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன், இவரது மகள் சந்திரகலா (வயது17). இவர் சேலம் பஞ்சப்பூர் அருகே உள்ள ஒரு தனியார் பஞ்சு மில் விடுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் பொங்கல் விடுமுறைக்கு தனது சொந்த ஊரான அணைக்குடம் கிராமத்திற்கு வந்திருந்தார். அப்போது உடல் நலக்குறைவு காரணமாக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு எடுப்பதற்காக சென்றுள்ளார்.
பின்னர் ஆஸ்பத்திரியில் சென்ற சந்திரகலா மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை அழகேசன் உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் விசாரித்தார். ஆனால் சந்திரகலா எங்கு சென்றார் என தெரியவில்லை. இது குறித்து தா.பழூர் போலீஸ் நிலையத்தில் என்று புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சந்திரகலாவை தேடி வந்தனர். மேலும் போலீசார் இது குறித்து அனைத்து மாவட்ட போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
இந்நிலையில் வேலூரில் சந்திரகலா தனியாக நின்றுள்ளார். இதனை பார்த்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் கடத்தப்பட்ட விபரம் தெரிய வந்தது. மேலும் விசாரணையில் திருவண்ணாமலை மேலகாட்டூரை சேர்ந்த வடிவேல் என்பவர் மகன் மார்க்கண்டேன்(24) கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் சந்திரகலாவை மீட்டு அவரை கடத்திய மார்க்கண்டேயனை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன், இவரது மகள் சந்திரகலா (வயது17). இவர் சேலம் பஞ்சப்பூர் அருகே உள்ள ஒரு தனியார் பஞ்சு மில் விடுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் பொங்கல் விடுமுறைக்கு தனது சொந்த ஊரான அணைக்குடம் கிராமத்திற்கு வந்திருந்தார். அப்போது உடல் நலக்குறைவு காரணமாக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு எடுப்பதற்காக சென்றுள்ளார்.
பின்னர் ஆஸ்பத்திரியில் சென்ற சந்திரகலா மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை அழகேசன் உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் விசாரித்தார். ஆனால் சந்திரகலா எங்கு சென்றார் என தெரியவில்லை. இது குறித்து தா.பழூர் போலீஸ் நிலையத்தில் என்று புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சந்திரகலாவை தேடி வந்தனர். மேலும் போலீசார் இது குறித்து அனைத்து மாவட்ட போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
இந்நிலையில் வேலூரில் சந்திரகலா தனியாக நின்றுள்ளார். இதனை பார்த்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் கடத்தப்பட்ட விபரம் தெரிய வந்தது. மேலும் விசாரணையில் திருவண்ணாமலை மேலகாட்டூரை சேர்ந்த வடிவேல் என்பவர் மகன் மார்க்கண்டேன்(24) கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் சந்திரகலாவை மீட்டு அவரை கடத்திய மார்க்கண்டேயனை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story






