என் மலர்
செய்திகள்

சிவகங்கை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை
சிவகங்கை அருகே வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் மேலப்பூவந்தி கிராமத்தை சேர்ந்தவர் அனிதா (வயது 55). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த 12¼ பவுன் நகை, ரூ. 4 ஆயிரம் ரொக்கத்தை திருடினர்.
பின்னர் அந்த கும்பல் அருகில் உள்ள 2 வீடுகளிலும் கொள்ளையடித்து உள்ளது. அங்கு கொள்ளை போன நகை, பணம் குறித்து தகவல் தெரியவில்லை.
கொள்ளை குறித்து அனிதா கொடுத்த புகாரின் பேரில் பூவந்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






