search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மானாமதுரையில் இருந்து தினமும் சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் விடக்கோரிக்கை
    X

    மானாமதுரையில் இருந்து தினமும் சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் விடக்கோரிக்கை

    மானமதுரையில் இருந்து சிவகங்கை, காரைக்குடி வழியாக தினமும் சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் விட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க ஆண்டு விழா மற்றும் மூத்த குடிமக்கள் சங்க கூட்டம் சங்க தலைவர் முன்னாள் தாசில்தார் அங்குச்சாமி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ராசு வரவேற்றார். நிர்வாகிகள் மாசானம், பாண்டியன், காமாட்சி ஆகியோர் பேசினர். பாலுச்சாமி நன்றி கூறினார்.

    இதில் மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் மீனாட்சிசுந்தரம் தீர்மானங்களை வாசித்தார்.

    3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அகவிலைப்படியை ஓய்வூதியத்துடன் இணைத்து திருத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.

    மானாமதுரை மேல் கரையில் இருந்து வைகை ஆற்றின் குறுக்கே கன்னார் தெருவிற்கு செல்ல தரைப்பாலம் அமைத்துதர வேண்டும். மானமதுரையில் இருந்து சிவகங்கை, காரைக்குடி வழியாக தினமும் சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×