என் மலர்
செய்திகள்

ஈரோடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பஸ் மோதி பலி
ஈரோடு அருகே அரசு பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன் சத்திரம் மல்லிநகர் என்ற இடத்தை சேர்ந்தவர் மோகன சுந்தரம் (வயது 27).
நேற்று இவர் ஈரோடு அருகே உள்ள அப்பாச்சி அய்யர் நகர் டாஸ்மாக் குடோன் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மோகன சுந்தரம் படுகாயம் அடைந்தார்.
உடனே அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே மோகன சுந்தரம் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு வீரப்பன் சத்திரம் மல்லிநகர் என்ற இடத்தை சேர்ந்தவர் மோகன சுந்தரம் (வயது 27).
நேற்று இவர் ஈரோடு அருகே உள்ள அப்பாச்சி அய்யர் நகர் டாஸ்மாக் குடோன் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மோகன சுந்தரம் படுகாயம் அடைந்தார்.
உடனே அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே மோகன சுந்தரம் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






