என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியலூர் அருகே இளம்பெண் கொலையில் மேலும் 2 பேர் கைது
Byமாலை மலர்18 Jan 2017 10:14 AM GMT (Updated: 18 Jan 2017 10:14 AM GMT)
அரியலூர் அருகே இளம்பெண் கொலையில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கீழமாளிகை கிராமத்தில், அழகுதுரை என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நந்தினி (17) என்பவர் பிணமாக கிடந்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், கீழமாளிகை கிராமத்தைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டன் (26) , நந்தினியை காதலித்து கர்ப்பமாக்கியதும் , நந்தனி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தவே, ஆத்திரமடைந்த மணிகண்டன், தனது கூட்டாளியான அயன் தத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் (28), வெற்றி செல்வன் (26) , கீழமாளிகையைச் சேர்ந்த திருமுருகன் (27) ஆகியோருடன் சேர்ந்து நந்தினியை கொலை செய்து கிணற்றில் வீசியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், மணிகண்டன், மணிவண்ணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய வெற்றிச்செல்வன், திருமுருகன் ஆகிய இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கீழமாளிகை கிராமத்தில், அழகுதுரை என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நந்தினி (17) என்பவர் பிணமாக கிடந்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், கீழமாளிகை கிராமத்தைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டன் (26) , நந்தினியை காதலித்து கர்ப்பமாக்கியதும் , நந்தனி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தவே, ஆத்திரமடைந்த மணிகண்டன், தனது கூட்டாளியான அயன் தத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் (28), வெற்றி செல்வன் (26) , கீழமாளிகையைச் சேர்ந்த திருமுருகன் (27) ஆகியோருடன் சேர்ந்து நந்தினியை கொலை செய்து கிணற்றில் வீசியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், மணிகண்டன், மணிவண்ணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய வெற்றிச்செல்வன், திருமுருகன் ஆகிய இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X