search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபா தலைமையில் அ.தி.மு.க.வை கைப்பற்றி ஆட்சியை பிடிப்போம்: முன்னாள் எம்.எல்.ஏ. துரை அன்பரசன்
    X

    தீபா தலைமையில் அ.தி.மு.க.வை கைப்பற்றி ஆட்சியை பிடிப்போம்: முன்னாள் எம்.எல்.ஏ. துரை அன்பரசன்

    தீபா தலைமையில் அ.தி.மு.க.வை கைப்பற்றி ஆட்சியை பிடிப்போம் என்று முன்னாள் எம்.எல்.ஏ. துரை அன்பரசன் கூறினார்.
    நெல்லிக்குப்பம்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் தீபா ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆபேல் தலைமை தாங்கினார். முன்னாள் கவுன்சிலர்கள் சுமதி, முத்துராமன், ராமாயி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. துரை. அன்பரசன், ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ராஜராஜசோழன், சிவஞானம், சுந்தரமூர்த்தி, முருகன், கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. நெல்லிக்குப்பத்தில் எம்.ஜி.ஆர்.சிலை அமைப்பது, தீபா தலைமையில் தொண்டர்களை திரட்டி ஆட்சியை பிடிப்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டம் முடிந்ததும் முன்னாள் எம்.எல்.ஏ.துரை அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜெயலலிதா இருந்த இடத்தில் சசிகலாவை ஏற்க முடியாது. அ.தி.மு.க. உடைந்தபோது ஜெயலலிதாவுடன் இருந்த 33 எம்.எல்.ஏ.க்களில் இரட்டை இலை சின்னம் கிடைக்க கையெழுத்து போட்டவர்களில் நானும் ஒருவன். என் போன்ற உண்மையான தொண்டர்கள் யாரும் சசிகலாவை ஏற்க மாட்டார்கள்.

    தீபாவை சந்தித்து தொண்டர்களை வழி நடத்த வேண்டும் என மனு கொடுத்துள்ளேன். ஜெயலலிதா இடத்துக்கு தீபா மட்டுமே வர தகுதியானவர் ஆவார்.

    என்போன்ற உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களையும் ஜெயலலிதா விசுவாசிகளையும் ஒருங்கிணைத்து தீபா தலைமையில் அ.தி.மு.க.வையும் ஆட்சியையும் கைப்பற்றும் வரை ஓய மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    1984-ம் ஆண்டு நெல்லிக்குப்பம் தொகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக துரை அன்பரசன் இருந்தார்.

    தற்போது அவர் தீபாவுக்கு ஆதரவு தெவித்துள்ளார். நெல்லிக்குப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. திருச்சி சவுந்தர்ராஜன் ஏற்கனவே தீபாவுக்கு ஆதரவாக இருந்து வருகிறார். இந்நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. துரை. அன்பரசனும் தீபாவுக்கு ஆதரவாக மாறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×