என் மலர்
செய்திகள்

அரியலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 வாலிபர்கள் கைது
அரியலூர் அருகே பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்:
அரியலூர் அருகே உள்ள பெரியாகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா இவரது மகள் வள்ளி (வயது 14). இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது. வள்ளி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9 வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் பெரியாகுறிச்சி பகுதியில் பொங்கல் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவை பார்ப்பதற்காக வள்ளி சென்றுள்ளார். அங்கு அவருக்கு அதே பகுதியை சேர்ந்த பிரேம்மணி (23) மற்றும் சீமான் (30) இருவரும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து வள்ளி தனது தாயிடம் கூறினார். சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்த வள்ளியின் தாய் அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேம்மணி மற்றும் சீமானை கைது செய்தனர்.
அரியலூர் அருகே உள்ள பெரியாகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா இவரது மகள் வள்ளி (வயது 14). இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது. வள்ளி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9 வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் பெரியாகுறிச்சி பகுதியில் பொங்கல் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவை பார்ப்பதற்காக வள்ளி சென்றுள்ளார். அங்கு அவருக்கு அதே பகுதியை சேர்ந்த பிரேம்மணி (23) மற்றும் சீமான் (30) இருவரும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து வள்ளி தனது தாயிடம் கூறினார். சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்த வள்ளியின் தாய் அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேம்மணி மற்றும் சீமானை கைது செய்தனர்.
Next Story






