search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிங்கம்புணரியில் காளையை அவிழ்த்துவிட்ட எச்.ராஜா மீது வழக்கு
    X

    சிங்கம்புணரியில் காளையை அவிழ்த்துவிட்ட எச்.ராஜா மீது வழக்கு

    சிங்கம்புணரியில் மஞ்சு விரட்டில் காளையை அவிழ்த்து விட்ட எச். ராஜா உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் பல்வேறு பகுதிகளில் மாட்டு பொங்கல் அன்று தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.

    சிங்கம்புணரியில் நடந்த மஞ்சு விரட்டில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தடையை மீறி காளையை அவிழ்த்துவிட்டார்.

    இது தொடர்பாக எச். ராஜா மற்றும் சிங்கம்புணரி ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்கள் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    அதுபோல தடையை மீறி மஞ்சு விரட்டு நடத்திய காளைபூர், சூரக்குடி, தத்துக் குடிபட்டி ஆகிய பகுதிகளில் 38 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    Next Story
    ×