search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலாஜா அருகே மனைவியுடன் தகராறு: தொழிலாளி தற்கொலை
    X

    வாலாஜா அருகே மனைவியுடன் தகராறு: தொழிலாளி தற்கொலை

    வாலாஜா அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தார்.

    வாலாஜா:

    வாலாஜா அருகே உள்ள திருமலைசேரி அணைக்கட்ட ரோடு பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 24). கூலி தொழிலாளி. இவரது மனைவி நந்தினி.

    இவர்களுக்கு திருமணமாகி 8 மாதம் ஆகிறது. நந்தினி கர்ப்பமாக உள்ளார். அவர் கலவை நேத்தம்பாக்கத்தை சேர்ந்தவர்.

    கணவருக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் அவர்கள் சண்டை போட்டனர். நந்தினி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பலமுறை சூர்யா அங்கு சென்று தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் நந்தினி மறுத்தார். இதனால் சூர்யா மனம் உடைந்தார்.

    நேற்று வீட்டில் இருந்த அவர் வி‌ஷம் குடித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குப் பதிபு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×