search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானிசாகர் வனப்பகுதியில் சுருக்கு கம்பிகள் வைத்து மான் வேட்டையாடிய கும்பல் - 2 பேர் சிக்கினர்
    X

    பவானிசாகர் வனப்பகுதியில் சுருக்கு கம்பிகள் வைத்து மான் வேட்டையாடிய கும்பல் - 2 பேர் சிக்கினர்

    பவானிசாகர் வனப்பகுதியில் சுருக்கு கம்பிகள் வைத்து மான் வேட்டையாடிய 2 பேரை கைது செய்தனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை சேர்ந்த பவானிசாகர் வனப்பகுதியான கேடே பாளையத்தில் வனத் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மடக்கி சோதனை நடத்தினர். அதில் 2 பேர் இருந்தனர். ஒருவரிடம் ஒரு சாக்குப்பை இருந்தது. அதை திறந்து பார்த்த போது மான் இறைச்சி இருந்தது. மான் தலை, கால் மற்றும் அதன் இறைச்சி இருந்ததை கண்டு அதை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்டவர்கள் பெயர் சாமிநாதன் (வயது42), மாறன் (35) என்றும் ஒத்தபனங்காட்டை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்தது.

    அப்போது மேலும் 5 பேர் இந்த வாகன சோதனையை கண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    பிடிப்பட 2 பேரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து 30 கிலோ மான் இறைச்சியையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்களிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் வனப்பகுதியில் சுருக்கு கம்பி வைத்து அதில் சிக்கிய 2 புள்ளி மான்களை கொன்று அதன் இறைச்சியை 7 பேர் கடத்தி கொண்டு வந்ததாகவும் கூறினர்.

    தப்பியோடி மேலும் 5 பேரை வனத்துறையினர் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×