என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பளுகல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்17 Jan 2017 10:29 AM GMT (Updated: 17 Jan 2017 10:29 AM GMT)
பளுகல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
பளுகல் அருகே இளஞ்சிறை பகுதியைச் சேர்ந்தவர் ரெஜிகுமார். இவரது மனைவி சுதா (வயது 41).
இவர், பொங்கல் விடுமுறைக்காக தனது குடும்பத்துடன் அருகில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். தனது கணவனின் உறவினர் சுதாவிற்கு போன் செய்து வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து சுதா, பெற்றோர் வீட்டில் இருந்து வீட்டிற்கு விரைந்து வந்தார்.
வீட்டினுள் சென்று பார்த்த போது வீட்டில் பீரோக்களில் இருந்த துணிமணிகள் சிதறிக் கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகைகளையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது. அருகில் இருந்த மற்றொரு பீரோவையும் உடைத்து அதில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றிருந்தனர்.
இது குறித்து சுதா, பளுகல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசாரும் அந்த பகுதியில் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர்.
வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றிருப்பதை நோட்டமிட்டு கொள்ளை சம்பவம் நடந்திருப்பதால் உள்ளூர் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பளுகல் அருகே இளஞ்சிறை பகுதியைச் சேர்ந்தவர் ரெஜிகுமார். இவரது மனைவி சுதா (வயது 41).
இவர், பொங்கல் விடுமுறைக்காக தனது குடும்பத்துடன் அருகில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். தனது கணவனின் உறவினர் சுதாவிற்கு போன் செய்து வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து சுதா, பெற்றோர் வீட்டில் இருந்து வீட்டிற்கு விரைந்து வந்தார்.
வீட்டினுள் சென்று பார்த்த போது வீட்டில் பீரோக்களில் இருந்த துணிமணிகள் சிதறிக் கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகைகளையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது. அருகில் இருந்த மற்றொரு பீரோவையும் உடைத்து அதில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றிருந்தனர்.
இது குறித்து சுதா, பளுகல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசாரும் அந்த பகுதியில் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர்.
வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றிருப்பதை நோட்டமிட்டு கொள்ளை சம்பவம் நடந்திருப்பதால் உள்ளூர் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X