என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீரனூர் அருகே பஸ் மோதி 2 பேர் பலி
    X

    கீரனூர் அருகே பஸ் மோதி 2 பேர் பலி

    கீரனூர் அருகே பஸ் மோதி 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ஓரண்குடியை சேர்ந்த அய்யர் மகன் ரஜினி(வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஜோசப்(26), பழனிச்சாமி(25).

    நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் கீரனூர் சென்று விட்டு ஓரண்குடிக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஜோசப் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். மற்ற இருவரும் பின்னால் அமர்ந்திருந்தனர்.

    அப்போது திருச்சி புறவழிச்சாலையை கடக்க முயன்ற போது கேரளாவில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பக்தர்களை ஏற்றி சென்ற பஸ் வந்தது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் ரஜினி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பழனிசாமி மற்றும் ஜோசப் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராயப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த பழனிசாமி மற்றும் ஜோசப்பை மீட்டு திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி இறந்தார்.

    இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×