என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேவாரம் அருகே குடிபோதையில் போலீசை தாக்கிய 2 பேர் கைது
Byமாலை மலர்16 Jan 2017 10:19 AM GMT (Updated: 16 Jan 2017 10:19 AM GMT)
தேவாரம் அருகே குடிபோதையில் போலீசை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் தேவாரம் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருபவர் ராஜேஸ்கண்ணன். இவர் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு செல்லாயிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த ஈஸ்வரன் மகன் ஜெயக்குமார் (வயது19), ராஜா மகன் தங்கமணி (25), முகமது காசிம் மகன் சித்திக் (24), சடையாண்டி மகன் செல்வஆனந்த் (24) ஆகியோர் குடிபோதையில் பொது மக்களுக்கு இடையூறாக பேசிக்கொண்டிருந்தனர். இதனை ராஜேஸ்கண்ணன் தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் கல்லால் ராஜேஸ்கண்ணனை தாக்கி அவரை பணி செய்ய விடாமல் தடுத்தனர். இது குறித்து தேவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கமணி மற்றும் சித்திக்கை கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X