search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருந்துறை அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை
    X

    பெருந்துறை அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

    பெருந்துறை அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள சுள்ளியம்புதூரை சேர்ந்தவர் வேலுசாமி கல் தொழிலாளி. இவரது மனைவி பிரேமா (28). இவர்களுக்கு தர்‌ஷன் (4), நவீன் (6) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    வாணிகவுண்டன் பாளையத்தில் உள்ள பிரேமாவின் அப்பா உடல் நிலை சரியில் லாததால் அப்பாவை பார்க்கவும், பொங்கலுக்கும் பிரேமா அப்பா வீட்டுக்கு வந்திருந்தார்.

    இன்று காலை வீட்டில் காபி குடித்தார். பிறகு திடீரென பிரேமாவை காணவில்லை. அவர் எங்கு சென்றார்? என்று தெரிய வில்லை.

    இதற்கிடையே வீட்டின் அருகே உள்ள தோட்டத்து கிணற்றில் பிரேமா பிணமாக கிடந்தது தெரிய வந்தது.

    100 அடி ஆழம் கொண்ட இந்த கிணற்றில் தண்ணீர் கிடையாது. வீட்டில் காபி குடித்த பிரேமா திடீரென ஓடி வந்து இந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    அவர் எதற்காக தற்கொலை செய்து கொண் டார்? குடும்ப தகராறு காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்று பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ஈஸ்வரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி பிரேமா உடலை மீட்டனர்.

    Next Story
    ×