என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அழகப்பபுரத்தில் அனுமின் நிலைய ஊழியர் மனைவியிடம் 7 பவுன் நகை பறிப்பு
Byமாலை மலர்15 Jan 2017 4:05 PM GMT (Updated: 15 Jan 2017 4:05 PM GMT)
அழகப்பபுரத்தில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
அஞ்சுகிராமம்:
அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சிவஜோதி (வயது35).
இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். தூங்கிக் கொண்டிருந்த சிவஜோதியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை பறித்தனர்.
அப்போது சிவஜோதி திடுக்கிட்டு எழுந்தார். மர்ம நபர்களை பார்த்ததும் அவர் திருடன்... திருடன் என கூச்சலிட்டார். அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து அஞ்சுகிராமம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் ஜெயந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கொள்ளையர்கள் குறித்த அடையாளங்களை சிவஜோதியிடம் கேட்டறிந்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. வாகன சோதனையிலும் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் கொள்ளையர்கள் யாரும் சிக்கவில்லை. இந்த கொள்ளை சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ.1ரூ. லட்சம் ஆகும்.
அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சிவஜோதி (வயது35).
இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். தூங்கிக் கொண்டிருந்த சிவஜோதியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை பறித்தனர்.
அப்போது சிவஜோதி திடுக்கிட்டு எழுந்தார். மர்ம நபர்களை பார்த்ததும் அவர் திருடன்... திருடன் என கூச்சலிட்டார். அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து அஞ்சுகிராமம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் ஜெயந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கொள்ளையர்கள் குறித்த அடையாளங்களை சிவஜோதியிடம் கேட்டறிந்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. வாகன சோதனையிலும் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் கொள்ளையர்கள் யாரும் சிக்கவில்லை. இந்த கொள்ளை சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ.1ரூ. லட்சம் ஆகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X