search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாலுமாவடியில் அற்புத விடுதலை பிரார்த்தனை  கூட்டம்: மோகன் சி.லாசரஸ் தலைமையில் நடந்தது
    X

    நாலுமாவடியில் அற்புத விடுதலை பிரார்த்தனை  கூட்டம்: மோகன் சி.லாசரஸ் தலைமையில் நடந்தது

    நாலுமாவடியில் அற்புத விடுதலை பிரார்த்தனை  கூட்டம் நடைபெற்றது. இதில் மோகன் சி.லாசரஸ் தேவசெய்தி கொடுத்து சிறப்பு பிரார்த்தனையை ஏறெடுத்தார்.

    நாசரேத்:

    தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மற்றும் குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடையக் கூடாரத்தில் அற்புத விடுதலைப் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் தேவசெய்தி கொடுத்து சிறப்பு பிரார்த்தனையை ஏறெடுத்தார்.

    குடும்ப ஆசீர்வாதத்திற்காகவும், வியாதியஸ்தர்களுக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியப்பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஊழியர்கள் செய்துள்ளனர்.

    Next Story
    ×