என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
கூடக்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்து: தொழிலாளி பலி
பேரையூர்:
அருப்புக்கோட்டையை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (வயது31), தனது நண்பர் சந்திரசேகரனுடன் பாதயாத்திரையாக பழனி புறப்பட்டார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூக் கோவில் போலீஸ் சரகம் பாரபத்தி பகுதியில் அவர்கள் வந்தபோது, அங்கு ஓரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது.
அந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக, பாதயாத்திரை பக்தர்கள் மீது மோதியது. அதே வேகத்தில் சென்று நிலைதடுமாறி சரிந்து விழுந்தது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் தலையில் காயம் அடைந்து அதே இடத்தில் பலியானார். பாத யாத்திரை பக்தர்கள் சிவ சுப்பிரமணியன், சந்திர சேகரன் ஆகியோர் காயம் அடைந்தனர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கூடக்கோவில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் பலியானவர் அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த ராஜசேகர் மகன் கட்டிடத் தொழிலாளி சதீஷ்குமார் (24) எனத் தெரிய வந்தது. அவரது உடல் பிரேத பரி சோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயம் அடைந்த 2 பேரும் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்