என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல் பட வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுவது தொடர்பாக அரசு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டரும் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையம் 7வது தேசிய வாக்காளர் தினத்தினை 25.01.2017 அன்று கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி 7வது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 7வது தேசிய வாக்காளர் தின கருத்தான இளைஞர்கள் மற்றும் எதிர்கால வாக்காளர்களுக்கு அதிகாரம் அளித்தல் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள், பேனர்களை பேருந்து நிலையம், புகைவண்டி நிலையம், பொதுமக்கள் கூடும் இடம் ஆகிய பல்வேறு இடங்களில் அலுவலர்கள் வைக்க வேண்டும்.
மாவட்ட தலைநகரில் தேசிய வாக்காளர் தின விழா ஊராட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், சமதாய குழுக்கள், பத்திரிகையாளர்கள், என்.எஸ்.எஸ், என்.சி.சி ஆகிய பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நடத்துவதுடன் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்க வேண்டும்.
மேலும் புதுக்கோட்டையில் நடைபெறும் தேசிய வாக்காளர் தின பேரணியை சிறப்பாக நடத்தும் வகையில் வருவாய்த்துறை, மகளிர்த்திட்டம், கல்வித்துறை, விளையாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் தங்களது தொடர்பான பணிகளை ஒருங்கிணைந்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






