என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் கடும் நடவடிக்கை: நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
    X

    குடிநீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் கடும் நடவடிக்கை: நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

    குடிநீரை மோட்டார் வைத்து உறிஞ்சுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரியலூர் நகராட்சி ஆணையர் வினோத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    அரியலூர்:

    குடிநீரை மோட்டார் வைத்து உறிஞ்சுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரியலூர் நகராட்சி ஆணையர் வினோத் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது -

    தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை சராசரி அளவை விட குறைவாக அளவு பெய்த காரணத்தால் தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் பற்றாக்குறை நிலவும் சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாக அரியலூர் நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குடிநீர் குறைவாகவே பெறப்படுகிறது. எனவே இந்நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீரினை சிக்கனமாக அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

    மேலும் குடிநீர் இணைப்புகளில் சட்டத்திற்கு புறம்பாக மின் மோட்டார் பயன்படுத்தி குடிநீரை உறிஞ்சுபவர்கள் கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்டவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு மின்மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

    மேலும் மின்மோட்டார் வைத்து சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சுபவர்களின் விபரம், குடிநீர் கசிவு மற்றும் குடிநீர் தேவை ஆகிய விபரங்களுககு 04329 220988 என்ற நகராட்சியின் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×