என் மலர்
செய்திகள்

அரியலூர் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்
அரியலூர்:
அரியலூரில் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் வக்கில் துரைராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சிவசங்கர் முன்னிலையில், மாவட்ட துணை செயலாளர் தனபால் வரவேற்று பேசினார்.
மாநில இளைஞரணி இணைச்செயலாளர் சுபாசந்திரசேகர், கொள்கை பரப்பு துணை செயலாளர் பெருநற்கிள்ளி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருணாமூர்த்தி, தில்லை காந்தி, ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் லதா, மாவட்ட பொருளாளர் பொய்யாமொழி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதிவேல், சந்திரசேகர், செல்வராஜ், கென்னடி, அசோகசக்கரவர்த்தி, சௌந்தர்ராஜன், மணிமாறன், ரங்காமுருகன், கண்ணன், நகரசெயலாளர் முருகேசன், கருணாநிதி, கோபாலகிருஷ்ணன், வக்கில் பிரிவு சின்னதம்பி, பொறியாளர் பிரிவு தங்கைஎழில்மாறன், இளைஞரணி தெய்வ இளையராஜா, மகளிரணி காந்திமதி உட்பட அனைத்து பிரிவு பொருப்பாளர்களும் கலந்துகொண்டனர்,
இக்கூட்டத்தில்அரியலூர் மாவட்டத்தின் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்தினை தடுக்க சாலைகளின் நடுவே பிரிவு சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகத்தை செயற்குழு கூட்டம் கேட்டுக்கொள்கிறது, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த சுபாசந்திரசேகரரை மாநில இளைஞரணி இணைச்செயலாளராக நியமனம் செய்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், தி.மு.க செயல் தலைவர் முக.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்ட முடிவில் ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தர்மதுரை நன்றி கூறினார்.






