என் மலர்
செய்திகள்

திருப்பத்தூரில் வாகனம் மோதி விபத்து: ஊழியர்- மூதாட்டி பலி
திருப்பத்தூரில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் தனியார் நிறுவன ஊழியர், மூதாட்டி இறந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள சுண்ணாயிருப்பை சேர்ந்தவர் பழனிக்குமார் (வயது35). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பழனிக்குமார் திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தினமும் அவர் மோட்டார் சைக்கிளில் சென்றுவருவது வழக்கம்.
இன்று காலையும் அவர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். ரணசிங்கபுரம் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த லாரி, கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனிக்குமார், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருப்பத்தூர் போலீசார் லாரி டிரைவர் மதுரையை சேர்ந்த பாண்டியன் (24) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் அருகில் உள்ள நெடுமரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி கருப்பாயி (65). இவர் இன்று காலை ரேசன் கடைக்கு சென்று பொங்கல் பொருட்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அங்குள்ள பை-பாஸ் ரோட்டை கடந்த போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கருப்பாயி, சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து திருப்பத்தூர் போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த திருமயத்தை சேர்ந்த ஆனந்த பாபு (24) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் அருகே உள்ள சுண்ணாயிருப்பை சேர்ந்தவர் பழனிக்குமார் (வயது35). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பழனிக்குமார் திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தினமும் அவர் மோட்டார் சைக்கிளில் சென்றுவருவது வழக்கம்.
இன்று காலையும் அவர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். ரணசிங்கபுரம் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த லாரி, கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனிக்குமார், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருப்பத்தூர் போலீசார் லாரி டிரைவர் மதுரையை சேர்ந்த பாண்டியன் (24) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் அருகில் உள்ள நெடுமரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி கருப்பாயி (65). இவர் இன்று காலை ரேசன் கடைக்கு சென்று பொங்கல் பொருட்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அங்குள்ள பை-பாஸ் ரோட்டை கடந்த போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கருப்பாயி, சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து திருப்பத்தூர் போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த திருமயத்தை சேர்ந்த ஆனந்த பாபு (24) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






