என் மலர்
செய்திகள்

திருமானூர் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி லட்சிய தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
திருமானூர் அருகே கீழகாவட்டாங்குறிச்சியில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி லட்சிய தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருமானூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கீழகாவட்டாங்குறிச்சியில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி லட்சிய தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் வினோத்ராஜ் தலைமை தாங்கினார். ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் சாமிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினர் மணியன், மக்கள் சேவை இயக்க மாவட்ட விவசாய அணி செயலாளர் அசோக்குமார், நாம் தமிழர் கட்சி மண்டல இணைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் கீழகாவட்டாங்குறிச்சி குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருவதால் மது அருந்துபவர்களால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகளும் அச்சத்துடன் செல்கின்றனர்.
மேலும் மது இளைஞர்களின் வாழ்வை சீரழிப்பதுடன் மனித உயிர்களை பறிக்கிறது. எனவே, டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதில் லட்சிய தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கீழகாவட்டாங்குறிச்சியில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி லட்சிய தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் வினோத்ராஜ் தலைமை தாங்கினார். ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் சாமிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினர் மணியன், மக்கள் சேவை இயக்க மாவட்ட விவசாய அணி செயலாளர் அசோக்குமார், நாம் தமிழர் கட்சி மண்டல இணைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் கீழகாவட்டாங்குறிச்சி குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருவதால் மது அருந்துபவர்களால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகளும் அச்சத்துடன் செல்கின்றனர்.
மேலும் மது இளைஞர்களின் வாழ்வை சீரழிப்பதுடன் மனித உயிர்களை பறிக்கிறது. எனவே, டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதில் லட்சிய தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






