என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மெக்கானிக் படுகாயம்
மோட்டார் சைக்கிள் மோதி மெக்கானிக் படுகாயமடைந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தைச் சேர்ந்த மேலஆறுமுகக் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் வேதலிங்கம் (52). இவர் தோப்புத்துறையில் வெல்டிங் கம்பெனியில் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு ஊருக்கு திரும்பி கொண்டிருந்த போது நாகை சாலை தியேட்டர் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அன்புராஜன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.
Next Story






