என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிகளில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு
    X

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிகளில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிகளில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
    புதுக்கோட்டை:

    தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அண்ணாமலை, அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான குழுவினர் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செங்கவிடுதி, ஏத்தநாடு, அகவயல், ஆவுடையார்கோவில், பரமந்தூர், அமரடக்கி, பரிவீரமங்கலம் பூவலூர், பாண்டிபத்திரம், கரூர், திருப்புனவாசல், சிவந்தாங்காடு, நானாக்குடி, அறந்தாங்கி, பெருங்காடு, ஏகப்பெரும களூர், திருவரங்குளம், குறுந்தடிவயல், கே.வி.கோட்டை, பழைய கந்தர்வக்கோட்டை, நெய்குடிப்பட்டி, குளத்தூர், விராலிமலை, நீர்பழனி ஆகிய இடங்களில் உள்ள வயல் வெளிகளில் கருகிய சம்பா நெல் பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள் மழையில்லாமல் கருகிய நெற்பயிர்களை எடுத்து வந்து ஆய்வு குழுவினரிடம் காண்பித்தனர்.

    பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இதில் வறட்சியால் பயிர் கருகியதால் வயல்வெளிகள் 1 லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல் நிலை கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் கணேஷ், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தலைவர் வைரமுத்து, எம்.எல்.ஏ.க்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, கந்தர்வகோட்டை ஆறுமுகம், மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி, புதுக்கோட்டை உதவி கலெக்டர் அம்ரீத், இணை இயக்குனர் (வேளாண்மை) அண்ணாமலை, வருவாய் கோட்டாட்சியர்கள் வடிவேல்பிரபு, ரம்யாதேவி, கூட்டுறவு சங்க தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×