என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரி அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி
    X

    தர்மபுரி அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

    தர்மபுரி அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார். உடலை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தர்மபுரி:

    தர்மபுரி அருகே உள்ள மாரவாடி பகுதியை சேர்ந்தவர் கம்பிள்செட்டி(வயது 60). கூலி தொழிலாளி. இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றார். அதன் பிறகு அவர் திரும்பி வரவில்லை.

    இந்த நிலையில் அங்குள்ள ஒரு கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து ஊர் மக்கள் அங்கு சென்று கிணற்றில் எட்டி பார்த்தபோது கம்பிள்செட்டி உடல் அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்தது. இது பற்றி அவரது உறவினர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கிருஷ்ணாபுரம் போலீசாருக்கும், தீயணைப்பு நிலைய வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்று கம்பிள் செட்டி உடலை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவத்தன்று அந்த வழியாக சென்றபோது, அவர் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து இறந்திருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×