என் மலர்
செய்திகள்

காவேரிப்பட்டணம் அருகே விஷம் குடித்து வாலிபர் பலி
காவேரிப்பட்டணம் அருகே எலிக்கு வைத்திருந்த விஷ மருந்தை குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள மலையாண்ட அள்ளி, குரும்பர் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் கவியரசன் (வயது 28).
இவர், எலிக்கு வைத்திருந்த விஷ மருந்தை எடுத்து சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கவியரசன் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






