என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
வேதாரண்யம் அருகே வீட்டு வாசலில் உள்ள வராண்டாவில் படுத்து தூங்கிய பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்று விட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டபாணி. இவரது மனைவி சிந்தாமணி (வயது 81). இவர் சம்பவத்தன்று தன் வீட்டு வாசலில் உள்ள வராண்டாவில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது அவர் அணிந்திருந்த தோடு, செயின் உள்பட 6½ பவுன் நகைககளை காணவில்லை. அதனை மர்ம நபர் பறித்து சென்று விட்டான்.
இதுகுறித்து சிந்தாமணி கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சப்- இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






