என் மலர்
செய்திகள்

திருப்போரூரில் பிடிபட்ட அதிசய விலங்கு
திருப்போரூரை அடுத்த சிறுதாவூர் காட்டுப்பகுதி சாலை ஓரத்தில் லேசான காயத்துடன் பூனை சாயலில் நரி முகத்தை போன்று அதிசய விலங்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்போரூர்:
திருப்போரூரை அடுத்த சிறுதாவூர் காட்டுப்பகுதி சாலை ஓரத்தில் லேசான காயத்துடன் பூனை சாயலில் நரி முகத்தை போன்று அதிசய விலங்கு ஒன்று இருந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்போரூர் வனத்துறையினர் சுமார் அரை அடி உயரமும், 1 அடி நீளமும் உடைய அந்த விலங்கை கூண்டில் பிடித்து வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்த விலங்கு அரிய வகை இந்தியன் சிறிய புனுக்கு பூனை என்பது தெரிய வந்தது. மரம் ஏறும் வகையைச் சார்ந்தது என்பதும், சிறிய வகை உயிரினங்களை உணவாக உட்கொள்ளும் என தெரிவித்தனர். காட்டுப் பகுதியிலிருந்து சாலைக்கு வந்த போது அடையாளம் தெரியாத வாகனத்தால் அடிபட்டு காயம் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. உடனடியாக அதை வனத் றையினர் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
திருப்போரூரை அடுத்த சிறுதாவூர் காட்டுப்பகுதி சாலை ஓரத்தில் லேசான காயத்துடன் பூனை சாயலில் நரி முகத்தை போன்று அதிசய விலங்கு ஒன்று இருந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்போரூர் வனத்துறையினர் சுமார் அரை அடி உயரமும், 1 அடி நீளமும் உடைய அந்த விலங்கை கூண்டில் பிடித்து வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்த விலங்கு அரிய வகை இந்தியன் சிறிய புனுக்கு பூனை என்பது தெரிய வந்தது. மரம் ஏறும் வகையைச் சார்ந்தது என்பதும், சிறிய வகை உயிரினங்களை உணவாக உட்கொள்ளும் என தெரிவித்தனர். காட்டுப் பகுதியிலிருந்து சாலைக்கு வந்த போது அடையாளம் தெரியாத வாகனத்தால் அடிபட்டு காயம் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. உடனடியாக அதை வனத் றையினர் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
Next Story






