என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகையில் தீ விபத்து: 7 வீடுகள் எரிந்து சாம்பல்
    X

    நாகையில் தீ விபத்து: 7 வீடுகள் எரிந்து சாம்பல்

    நாகையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 வீடுகள் எரிந்து சாம்பல் ஆனது. ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை தாமரைக்குளம் மேற்கு தெருவில் வீரம்மாள், செல்வி, ஜோதி, குப்பம்மாள், முருகேஸ்வரி, போதுமணி ஆகியோர் கூரை வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களது வீட்டில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அருகில் இருந்த ராசாயி ஓட்டு வீட்டுக்கும் பரவியது. அங்கிருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

    இது குறித்து நாகை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் 7 வீடுகளிலும் இருந்த கட்டில், பீரோ, டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.

    சேத மதிப்பு ரூ. 5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    தீ விபத்தின் போது வீட்டில் கட்டப்பட்டு இருந்த ஒரு ஆடு கருகி பலியானது. தென்னை மரமும் எரிந்தது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

    Next Story
    ×